Sunday, February 27, 2011

2009

நெஞ்சு உயர்த்திச் சொல் நீ வேங்கை என்று
உன் உயிர் இன்று விதைக்கப் படும்
நாளை ஈழம் என்றொரு தேசம் முளைக்கும்
காலை வரை கண்ணுறங்கு

இலங்கை தேசத்தை யார் வரைந்தாலும்
அது நம் கண்ணீர் துளி வடிவில் காட்சி தரும்
பற்றி எரி என் கண்ணே
இனி தீப்பொறியாய் அது தெரியட்டும்

விடியும் வரை வானம் பார்த்துக் கிடக்க
நீ முடவனல்ல
உன் தந்தையும் தாயும்
போரிட்டு மாய்ந்தது மெய்யெனில்
புறப்படு பூமி நெம்பிப் புரட்டிப்போட

வடியும் ரத்தத்தில் நூறு புலிகள் பிறக்கும்
வலிகள் ஒன்றும் புதிதில்லை இது உனது தருணம்
வீழ்ந்தால் வீர மரணம் பாய்ந்து வா

ஓடிப் பிழைக்கும் நேரத்தில்
மோதி வெற்றி பெறலாம்
உன் கைகள் இரண்டிலும் பத்து ஆயுதம்
போர்க்களம் உனது நிலம்
அதை போரிட்டு எடு

உந்தன் உறவு, உடைமை, வீடு
எவற்றிலும் உனக்கு உரிமை இல்லை என்று
உதைத்துத் தள்ளும்போது உரக்கச் சொல்லு
"அது உனதும் இல்லை" என்று

உன் தங்கை, அக்காள், தோழி உடைகள் கலைய
இனி ஒரு கை நீளுமாயின்
நூறு குண்டுகள் அவன் உடல் துளைக்கட்டும்
ஈழம் ஒன்றே இலக்கு
கேடயம் எறிந்துவிட்டு ஆயுதம் எடு

செத்துப் போனவள் உன்னை தூங்கிக் கிடக்கவா பெற்றாள்?
மார்பில் பாலை மட்டுமா கொடுத்தாள்?
போரிட்டுச் சாவதற்கே பிறந்துவிட்டாய்
எழுந்துவா விடுதலை ஒன்றே விடை

காலை வரை கண்ணுறங்கு என் கண்மணியே
"நாளை" உனக்கு வேண்டுமென்றால்
நகங்கள் வளர்த்துப் போரிடு
கண்ணிவெடி புதைக்க நான் போகவேணும்
என் கண்மணியே சீக்கிரமாய் கண்ணுறங்கு

No comments:

Post a Comment