Sunday, February 27, 2011

2006

நனைந்த ஒரு பிற்பகலின்
அழகை ரசித்து கைகோர்த்து நடப்போம்
நமக்காகவே இந்த உலகத்தில் மலரும்
மழைக் காலம்

நெடும் பாதையில் தொடுவானம் வரை மழை
அந்த நெடுங் கவிதையில் ஒரு புள்ளியாய் நம் குடை
பொழியும் கோடித் துளிகளில் ஒரு துளி
குடைக்குள் உயிரோடு உன்னுடன்
ஒரு நதி என்னுடன்

மேகம் சூழ் கொண்டு மின்னல் வாள்கொண்டு
நம்மைக் களவாட
நீலத்திரை கிழித்து நீந்திச் சென்று
ஒரு யுகத்திற்கான தனிமை வாங்கி வருவோம்

No comments:

Post a Comment